இலங்கையில் ஆடைத்தொழிற்சாலையொன்றில் 300இற்கும் மேற்பட்டோருக்கு திடீர் சுகயீனம்
கொக்கல ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 325 பேர் கராபிட்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உணவு விசமடைந்தமை காரணமாக அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கராபிட்டி வைத்தியசாலையின் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த தொழிற்சாலையில் காலை ஆகாரமாக வழங்கப்பட்ட உணவை உட்கொண்டவர்களுக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக இவ்வாறு அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.